Wednesday 8 May 2013

கவிதை

கனத்தது கவிதை
கடதசிக்கு
சுவைத்தது கழுதை...!

ஏதிலி


வான்மழையை ஏந்தாது
எம்கூரை வாங்கும்
இம்மழலைகளை தாங்காது
பசிகூட ஏங்கும்..!
மழைகண்டு வீடுகசிய
மழலை பசிகொண்டு விழிகசியும்
எழ்மைகொண்ட ஏதிலி
எதைக்கொண்டு பசிகழிக்கும்..?
ஒன்றேகுலம் ஒன்றேதேவன்
என்றோரெல்லாம்
ஒரேதேசம் ஒரேநாடுயென
ம(று)றக்காமல் சொல்லிப்போயினர்...!

Wednesday 1 May 2013

மேதினம்



பாவுக்கு கருவாகவும்
பாருக்கு எருவாகவும்
பயன்பட்டுக்கொண்டோம்

அரசே மேதின ஊர்வலத்தில்..!
யாரிடத்தில் கேட்கிறது
என்னுரிமையை..?
நான் கேட்கவேயில்லை...!