துமித்திட துடித்திடும் என்வானம்
என்னில் ஒருதுளி
நனைந்திட ஏங்கிடும் பூமியுன்-மௌனக்
காற்று வந்தலைக்கிறது
என்மழை மேகங்களை...!
பாய்கின்ற நதியேந்துமென்னை-ஆனாலும்
பூக்கின்ற உன் தழுவல்தானே
நான் தூறிடக்காரணம்...!!
என்னில் ஒருதுளி
உன்னில்பட்டு
ஆகாதோ பன்னீர்த்துளி...!!!