Friday 14 December 2012

பூந்தோட்ட மழை.

துமித்திட துடித்திடும் என்வானம்
நனைந்திட ஏங்கிடும் பூமியுன்-மௌனக்
காற்று வந்தலைக்கிறது
என்மழை மேகங்களை...!

பாய்கின்ற நதியேந்துமென்னை-ஆனாலும்
பூக்கின்ற உன் தழுவல்தானே
நான் தூறிடக்காரணம்...!!

என்னில் ஒருதுளி
உன்னில்பட்டு
ஆகாதோ பன்னீர்த்துளி...!!!

பிரதியீடு.

மயிலின் அசைவும் குயிலின் இசையும்
வயலின் அழகும்-இன்னும் 
வாழ்ந்துகொண்டிருகின்றன
வலைத்தளங்களினூடே...!!!