கவியும் இருளோடு
கனத்திடும் இதயம்
காவிய-நாயகன் இல்லையென்று
கானக-நரிகள் நர்த்தனமாடும்
வரிகள்தாண்டி
வரிப்புலி வரவேண்டும்
வாடிய உள்ளங்கள்
வனப்போடு வாழ்ந்திட
சில்லென்ற பனியோடு
சிலிர்ந்திட விடியல்
சிறகின்றியே மனமும்
சிறைதாண்டிடும்
இலவம்பஞ்சல்ல-எம்
இதயம் வேண்டிநிற்கும்
ஈழமென்று
ஈனர்களும் அறிந்திடவேண்டும்...!!!