ஒரே பேருந்தின்
பக்கத்து ஆசனங்களில்
நானும் அவளும்..
வழமையாக இயற்கையை
தோழமையுடன் பார்க்கும் மனம்
ஏனோ இன்று அப்படிப்பார்க்கவில்லை
அவள் என்னைப்பார்க்கிறாளா
என்பதைப்பார்ப்பதிலேயே
என்பயணத்தின் பாதி கடக்கிறது....
மனதை போலவே என் கண்களும்
எதையோ தேடுகின்றன ....
அவள் எண்ணிப்பார்க்காத நேரம் பார்த்து
அவளைப்பார்க்கின்றேன்...
அவள் என்னை பார்க்கின்றாள்....
அப்போதுதான் தெரிகின்றது
இவ்வளவு நேரமாய் அவளை
நான் பார்ப்பதை அவள் பார்த்திருக்கிறாள்...
கண்களை திருப்பி
கண்ணாடிவழியே வெளிகளை பார்க்கின்றேன்..
கடைக்கண் பார்வை நான் பார்க்க
என்னை பிரதிபலிக்கின்றாள் அவளும்...
வெளிகளின் வழிவரும் சுழல் கூட
அவள் குழல் தழுவியே வருகின்றது....
இவளை பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை
இந்த குழப்பம் என்னது.....
எந்த சலனமும் இல்லாமல்
அவள் கண்கள் என்னையும் தாண்டி
எம்மைத்தாண்டிச்செல்லும் மரங்களில்....
இந்த பயணம் என் ஊர் போகுமட்டுமா...
இல்லை என் உயிர் போக்கு மட்டுமா.....
விடைதெரியா கேள்விகள் .....
பக்கத்து ஆசனங்களில்
நானும் அவளும்..
வழமையாக இயற்கையை
தோழமையுடன் பார்க்கும் மனம்
ஏனோ இன்று அப்படிப்பார்க்கவில்லை
அவள் என்னைப்பார்க்கிறாளா
என்பதைப்பார்ப்பதிலேயே
என்பயணத்தின் பாதி கடக்கிறது....
மனதை போலவே என் கண்களும்
எதையோ தேடுகின்றன ....
அவள் எண்ணிப்பார்க்காத நேரம் பார்த்து
அவளைப்பார்க்கின்றேன்...
அவள் என்னை பார்க்கின்றாள்....
அப்போதுதான் தெரிகின்றது
இவ்வளவு நேரமாய் அவளை
நான் பார்ப்பதை அவள் பார்த்திருக்கிறாள்...
கண்களை திருப்பி
கண்ணாடிவழியே வெளிகளை பார்க்கின்றேன்..
கடைக்கண் பார்வை நான் பார்க்க
என்னை பிரதிபலிக்கின்றாள் அவளும்...
வெளிகளின் வழிவரும் சுழல் கூட
அவள் குழல் தழுவியே வருகின்றது....
இவளை பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை
இந்த குழப்பம் என்னது.....
எந்த சலனமும் இல்லாமல்
அவள் கண்கள் என்னையும் தாண்டி
எம்மைத்தாண்டிச்செல்லும் மரங்களில்....
இந்த பயணம் என் ஊர் போகுமட்டுமா...
இல்லை என் உயிர் போக்கு மட்டுமா.....
விடைதெரியா கேள்விகள் .....