தெருவோரமாய் நிற்கும் வானளாவிய மரங்கள்
தெருப்புளுதியை தம்மிலைகளில் வாங்கிய செடிகள்..
கடந்துசெல்ல மனம்வராத இயற்கையின் கொடையாய்
பரந்துசெல்லும் பச்சைப்பசும் நெல்வெளிகள்....
தெருப்புளுதியை தம்மிலைகளில் வாங்கிய செடிகள்..
கடந்துசெல்ல மனம்வராத இயற்கையின் கொடையாய்
பரந்துசெல்லும் பச்சைப்பசும் நெல்வெளிகள்....
கலை விடிந்ததை சேவலுக்கே சொல்லும் மனிதங்கள்
மாசிக்குளிரிலும் உழவடித்து முடித்த பின்புதானே
காலைப்பகலவனை வரவேற்கும் இந்த உழவரினம்..
சூரியன் வந்தது விட்டதை மீண்டும் சொல்லும்
பள்ளிசெல்லும் சிறுவண்டுகள்....
எதோ வைத்ததை எடுக்கச்செல்வது போல்
ஆகாயத்தில் சந்தை நாடாத்திச்செல்லும்
பறவைக்கூட்டங்கள் நடுவே ஒளிக்கீற்றாய்
கதிரவன் எறியும் ஒளிக்கதிர்கள்...
மார்கழி மழையையும், பங்குனி வெயிலையும்
பயிரோடு உயிராக உடலோடு தான் வாங்கி
தயிரோடு பச்சைமிளகாய் பழைய சாதத்தோடு
உரித்த வெங்காயம் சாப்பிட்டு,பாரே பந்தி போட
காளையில் நுகம் வைத்து ஏர்பிடிக்குமினம்.
இதெல்லாம் நேற்றோடு முற்றுப்பெற்ற
காற்றோடு கலந்துபோன ,
வீரத்தோடு தோற்றுப்போன,
வரலாறுகளை புரட்டிப்போட்ட,
புதிதாய் நாநூறுகள் எழுதவைத்த
வன்னியின் பழைய நிலைகள்.....
உயிரிழப்பு என்பது எதோ முடி வெட்டுவதைப்போல
இழவு வீடுகளாய் எமது அயல் வீடுகள்...
இழவு விழ யாருமின்றி எமது வீடுகள்...
மும்மாரி பொழிந்த நம்மிடங்கள் இப்போதெல்லாம் எந்நேரமும் செல்மாரி பொழிகின்றன...
புதிதாய் யாரும் ஊருக்குள் வந்தால்
கெதியாய் கத்திக்காட்டும் அட்காட்டிகூட
பறந்து திரியும் கிபீர் வந்ததை சொல்வதில்லை..
அதுக்கும் பழகிவிட்டதோ?இல்லை பயமா இருக்கோ?
உண்ண உணவின்றி ,படுக்க பங்கரின்ரி ,போக தரையின்றி
போனபோது எஞ்சிய உயிர்வாழும் நடைபிணங்கள்...
உயிரிழந்துபோன சொந்தங்களை அப்பிடியே போட்டிட்டு
கைகாலிழந்து குற்றுயிராயிருந்த நேசங்களை மட்டும்
தூக்கிக்கொண்டு வவுனியா வந்து சேருகிறது..
உழவு செய்து உலகை வாழவைத்த ஒரு இனம்..
ஒருவேளை உணவுக்கும் தண்ணீருக்கும் கையேந்துகிறது
நம்மை அழித்த நயவஞ்சகரிடமே கை எந்துகிறோம்..
நமக்கு ஒருவேளை உணவு தருமாறு....
மாசிக்குளிரிலும் உழவடித்து முடித்த பின்புதானே
காலைப்பகலவனை வரவேற்கும் இந்த உழவரினம்..
சூரியன் வந்தது விட்டதை மீண்டும் சொல்லும்
பள்ளிசெல்லும் சிறுவண்டுகள்....
எதோ வைத்ததை எடுக்கச்செல்வது போல்
ஆகாயத்தில் சந்தை நாடாத்திச்செல்லும்
பறவைக்கூட்டங்கள் நடுவே ஒளிக்கீற்றாய்
கதிரவன் எறியும் ஒளிக்கதிர்கள்...
மார்கழி மழையையும், பங்குனி வெயிலையும்
பயிரோடு உயிராக உடலோடு தான் வாங்கி
தயிரோடு பச்சைமிளகாய் பழைய சாதத்தோடு
உரித்த வெங்காயம் சாப்பிட்டு,பாரே பந்தி போட
காளையில் நுகம் வைத்து ஏர்பிடிக்குமினம்.
இதெல்லாம் நேற்றோடு முற்றுப்பெற்ற
காற்றோடு கலந்துபோன ,
வீரத்தோடு தோற்றுப்போன,
வரலாறுகளை புரட்டிப்போட்ட,
புதிதாய் நாநூறுகள் எழுதவைத்த
வன்னியின் பழைய நிலைகள்.....
உயிரிழப்பு என்பது எதோ முடி வெட்டுவதைப்போல
இழவு வீடுகளாய் எமது அயல் வீடுகள்...
இழவு விழ யாருமின்றி எமது வீடுகள்...
மும்மாரி பொழிந்த நம்மிடங்கள் இப்போதெல்லாம் எந்நேரமும் செல்மாரி பொழிகின்றன...
புதிதாய் யாரும் ஊருக்குள் வந்தால்
கெதியாய் கத்திக்காட்டும் அட்காட்டிகூட
பறந்து திரியும் கிபீர் வந்ததை சொல்வதில்லை..
அதுக்கும் பழகிவிட்டதோ?இல்லை பயமா இருக்கோ?
உண்ண உணவின்றி ,படுக்க பங்கரின்ரி ,போக தரையின்றி
போனபோது எஞ்சிய உயிர்வாழும் நடைபிணங்கள்...
உயிரிழந்துபோன சொந்தங்களை அப்பிடியே போட்டிட்டு
கைகாலிழந்து குற்றுயிராயிருந்த நேசங்களை மட்டும்
தூக்கிக்கொண்டு வவுனியா வந்து சேருகிறது..
உழவு செய்து உலகை வாழவைத்த ஒரு இனம்..
ஒருவேளை உணவுக்கும் தண்ணீருக்கும் கையேந்துகிறது
நம்மை அழித்த நயவஞ்சகரிடமே கை எந்துகிறோம்..
நமக்கு ஒருவேளை உணவு தருமாறு....