Tuesday 8 January 2013

எப்படிமறக்க...?

தண்ணீருக்கு கப்பலுண்டு
கண்ணீரைத்தான் எப்படிக்கடக்க
என்னெஞ்சில் நிறைஞ்சிருக்கிற
உனைநானும் எப்படிமறக்க...?

கடல்கள் நிரம்பிவழியாது
காதல்கள் குறைந்தால் வாழ்வேது
இரட்டைக்கிழவி பிரிந்தால் வாழாது
நீயின்றி நானேது ?

துயிலும் விழியும்
மயிலே உனக்காகத்தானே
நுனிப்புல்லாய் படர்கிறேன்
பனித்துளிநீ வா மானே...!!!