கடந்த ஒருமதத்துக்குள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த திரைப்படங்கள் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத கதைக்களம் கொண்டவை.இரண்டு தமிழ்ப்படங்கள்(சகுனி,பில்லா2 )மற்றொன்று தெலுங்கு -மொழிமற்றப்பட்டபடம்(நான்ஈ).முதலிரண்டு படங்களும் கதாநாயகர்களினாலேயே எதிர்பார்ப்புக்குள்ளகியிருந்தன.மாற்றியது வித்தியாசமான கதைக்காக எதிர்பார்க்கப்பட்டது.
நான் ஈ திரைப்படமானது நானி,சமந்தா மற்றும் சுதீப் ஆகியோருடன் ஒரு ஈ(இலையான்) நடிக்க மாவீரன்(மகதீரா) இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.இப்படத்தின்மீதான பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் வித்தியாசமான் அகத்தையும் இயக்குனரும் ஆகும்.வெவ்வேறு கதைக்களங்களில் வித்தியாசமான திரைக்கதையோடு படங்களை தருவதில் சிறந்த இயக்குனர் இவர்.ஸ்டுடென்ட் நம்பர் 1 ,கஜேந்திரா,மாவீரன் மற்றும் மரியாதை ராமண்ணா இவைகள் இவரின் கைவண்ணத்தில வெளியான சில.எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருந்தது.அதை பூர்த்திசெய்யும் வகையில் படம் இருந்ததோடு படத்தில் பலவிசயங்கள் பாராட்டும்படியிருந்தன குறைகள் சில காணப்பட்ட போதிலும்.
ஆரம்பத்தில் சிலநிமிடங்களே வந்து போனாலும் படம்முழுக்க இழையோடும்,படத்தை இழுத்து செல்லும் நானி-சமந்தா இடையேயான காதல்/ரொமான்ஸ்.இன்னும்கொஞ்சம் காதல் கட்சிகளை நீட்டியிருக்கலாம்.
ரத்தத்தை அதிகமாக காட்டாமல்/காடுக்கத்து கத்தாமல் ஸ்டைலிஷாக வந்து வில்லத்தனம் செய்வதிலாகட்டும் ,ஈ க்கு பயந்து போராடும்போதாகட்டும் இல்லை சமந்தாவை அடைய வெறியாய் அலையும் போதாகட்டும் ஜொலிக்கிறார் சுதீப் இயக்குனருடன் சேர்ந்து.
சில இடங்களைத்தவிர கிராபிக்ஸ் என்பது பெரிதாக தெரியவில்லை,கொஞ்சம் பிழைத்தாலும் காட்டூன் பார்க்கும் உணர்வைத்தந்துவிடும்.
அதையுணர்ந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் பார்க்கக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது நான் ஈ.
துறு துறு நடிப்புமே படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தவை.எதிர்பார்த்தவைகள் அனைத்துமே பிசுபிசுத்துவிட படம் புஷ்வானமாகிப்போனது.உலகம் முழுவதும் 1500 அரங்குகளில் திரையிடப்பட்ட சகுனி பெரிய தோல்வியாக தயாரிப்பளருக்கு இருக்கப்போவதில்லை.ஆனால் கார்த்தியின் முதல் தோல்விப்படமாக பதிவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.கார்த்தியிடமிருந்து நல்ல கதையம்சமுள்ள படங்களை இத்தோல்வி தரக்கூடும்(
பில்லா 2 அஜித்,பார்வதி ஓமனக்குட்டன்,புருணா அப்துல்லா,சுதன்சனு பாண்டே மற்றும் வித்யுத் ஜாம்வெல் ஆகியோர் நடிக்க 'உன்னைப்போல் ஒருவன்' சக்ரி டோல்டி இயக்க இரா.முருகன் மற்றும் முகம்மது ஜாபர் ஆகியோரின் வசனத்தில் யுவனின் இசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடு வந்துள்ள படம்.இந்த படத்தின் பெயர் முதற்கொண்டு இயக்குனர் வரை எல்லாமே எதிர்பார்ப்பிற்கு காரணமாக இருந்த போதும் அஜித் எனும் தனி மனிதரே அதிகம் எதிர்பார்க்க வைத்தார்.அவர்நடித்த பில்லாவின் மிகப்பெரிய வெற்றி ,மங்காத்தாவின் வெற்றி ஆகியவை காரணமாக இருக்கலாம்.
அஜித் தனது ரசிகர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனம்.நடிப்பில் கவனம் செலுத்துமளவுக்கு கதைத்தெரிவில் அஜித் கவனம் செலுத்துவதில்லை.தெளிவில்லாத மற்றும் நம்பமுடியாத கதையோட்டம்,சீரற்ற திரைக்கதை மற்றும் பொருத்தமற்ற கதாநாயகிகள் ஆகியவை எதிர்மறையான பெறுகைக்கு காரணங்களாக இருக்கும்.அஜித்திற்கான ஒப்பனிங்கும் அதிகளவான திரையரங்குகளும் வசூலில் படத்தை காப்பாற்றி விடும்.அனால் ரசிகர்களை திருப்திப்படுத்த தீனா ,வரலாறு போன்ற வித்தியாசமான படங்களை தருவாரா அஜித்....???
நல்லவேளை ஒரேநாளில் சகுனியும் பில்லாவும் வெளிவர இருந்தன ,வந்திருந்தால் இரண்டு படங்களின் பாடும் அம்போதான்.......
No comments:
Post a Comment