என்நெடுநாள் ஆசைகளில்
அவளின் ஸ்பரிசமுமொன்று..
தொட்டுவிட துடித்தாலும்
உடைந்துவிடக்கூடும்
நட்பெனும் போர்வை
எனும் பயமும் கூடவே...!
பசுத்தோலோடு புலி
பசிக்கும் காதலிற்காய்
கானல்நீரான காதல்
கைக்கெட்டும் என்று..!
காலைக் கடற்க்கரைபோல..
மலரத்துடிக்கும் முகிழ்போல..
பன்னீராகும் பனித்துளிபோல..
என்வரிகளின் உள்ளுறைந்தது
அவள்நினைப்பு...!
வாசிக்கமட்டும் தெரிந்த
கவிதைகளை
ரசிக்கவும்
வைத்தவளவள்..!
அவளே விதையாக
மலர்ந்த கவியோடு
என்னை சலனப்படுத்தும்
வருகைக்கான காத்திருப்பு...!!!