இருட்டினில் உன் முகம் பார்க்க ஆசை
இருந்தும் முடிவதில்லை நிலவாய்
தெரிவதால் உன் வதனம்....
நானும் நிலவாக வளர்கின்றேன்
உன்னைக்காணும்
பௌர்ணமி தினங்களில்.
கவிதைகள் தேவையில்லை
நம் காதலுக்கு
நீ போதுமே..
காவியங்கள் வேண்டியதில்லை
எனக்கு
நம் காதல் காவியமே...
இங்காவது முடியுமா
காவியம்
காதலர்கள் சேர்வதாய்...?
காவியங்கள் வாழ
காதலர்களை சாகடிக்கிறார்கள்
காதல் வாழ்வதாய் கூறிக்கொண்டு..