Wednesday, 16 May 2012

பெண்...


தன்கலையார்வம்
தணித்திட
மெய்யொன்று
வேய்தான் பிரம்மன்...!

கயலை கண்ணாக்கி
வில்லை இமையாக்கி
பழத்திலே கன்னமாக்கி
மலரை இதழாக்கி

முழுமதியை முகமாக்கி
நதிவளைவை அங்கமாக்கி
கமலத்தில் பாதமாக்கி
காரைக் குழலாக்கி...!

காளையரை
கடைந்திட
உலவிடவிட்டான்
உலகிலே
அழகுப்பெண்ணாக...!

No comments:

Post a Comment