தன்கலையார்வம்
தணித்திட
மெய்யொன்று
வேய்தான் பிரம்மன்...!
கயலை கண்ணாக்கி
வில்லை இமையாக்கி
பழத்திலே கன்னமாக்கி
மலரை இதழாக்கி
முழுமதியை முகமாக்கி
நதிவளைவை அங்கமாக்கி
கமலத்தில் பாதமாக்கி
காரைக் குழலாக்கி...!
காளையரை
கடைந்திட
உலவிடவிட்டான்
உலகிலே
அழகுப்பெண்ணாக...!
No comments:
Post a Comment