Tuesday, 8 May 2012

முத்து

கடற்கரை
மண்மீது
உன்பெயரோவியம்..

உன்போலவே
எத்துனை
வளைவுகள்
உன்பெயரிலும்..

கணப்பொழுதில்
கடலலை
கவர்ந்து சென்றது
பெயர்வரையை..

கரைதட்டிய
கடற்காற்று
காதில் சொன்னது
"அழகிய முத்துக்கள்
கடலிற்கே சொந்தம்"...!

No comments:

Post a Comment