சிதைத்தது
சிலைவரை
கருவறுப்பு
கல்லறைவரை..!
சிறுத்தைகளின்
சினம்
சிலைதாண்டியும்
சிந்திடக்கூடும்..!
கல்லறைமேனியர்
கடலோடு தாயகம்
காத்திடக்கூடும்..!
பயங்கொண்ட பௌத்தம்
எச்சங்களையும்
மிச்சங்களையும்
துடைத்தது..!
நியதிகள்
நிந்தனைகள்
நீக்கிட இலங்கைக்கு
நீசமற்ற நண்பர்கள்..!
இழந்ததும் அழுதிட
வழியில்லை
இறந்தவரை தொழுதிட
இடமில்லை தமிழுக்கு...!
No comments:
Post a Comment