Friday, 27 April 2012

எம்தலைவா

வற்றிப்போன குளமல்ல
வழங்கிப்போகும் வள்ளல்
இறங்கிப்போகும் இனமல்ல
இரங்கிப்பேசும் மனம்...!

புறம்பேசும் குணமல்ல
புரட்டிப்போடும் மறம்
ஓவியக்கதையல்ல
காவிய வாழ்க்கை...!

புரண்டோடும் வீரம்
புறமோடும் எதிரும்
உயிர்கொடுக்கும் தீரம்
உன்னத தியாகம்...!

வரலாறே வழிகாட்டியாய்
வரலாற்றை நீ கட்டினாய்
சிதைந்தால் ஈழதேசம்-என்
சிதைமீதுதான் சாயணும்
என்றவன் நீ ...!

உடலோடு முடியாது
உந்தன் வாழ்வு
உதட்டோடு மடியாது
உந்தன் கனவு...!

No comments:

Post a Comment