நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெட புழுதியில் எறிந்தோம்.
நானிலம் காத்திட சேனை கொண்டும்
எழுகையில் விழுந்தோம்...!
இடிவந்து மடிவிழ
கூடியவர் மடிந்திட
விடிகையில் இருன்டிட
விடிவெள்ளி பார்த்திருந்தோம்..!
பேதமின்றி பேடியர் சேர்ந்து
ஆடிய சதியாட்டத்தில்
வேலியில்லா பயிராய்
வெள்ளாடு மேய நின்றோம்.
நாதியில்லா இனமாய்
நாம் வாடிநின்றோம்...!
காக்கைவீட்டில்
குயில் இருப்பதுண்டு.
கருநாகம் இருக்குமெண்டு
முன்னவர்கள் சொன்னதில்லை...!
உதிர்ந்த பின்னும்
வேணில்காலமே சருகின் வேண்டுதல்.
கனியமுன் கொய்த காயும்
தான் விதையாக
சேயின் வரவிற்காய் காத்திருக்கும்...!
இனியொரு படை செய்தால்
பிளவுக்கு விடை கொடுத்து
புதியதோர் புள்ளி
பூமியில் வைத்திடு தலைவா..!
நலங்கெட புழுதியில் எறிந்தோம்.
நானிலம் காத்திட சேனை கொண்டும்
எழுகையில் விழுந்தோம்...!
இடிவந்து மடிவிழ
கூடியவர் மடிந்திட
விடிகையில் இருன்டிட
விடிவெள்ளி பார்த்திருந்தோம்..!
பேதமின்றி பேடியர் சேர்ந்து
ஆடிய சதியாட்டத்தில்
வேலியில்லா பயிராய்
வெள்ளாடு மேய நின்றோம்.
நாதியில்லா இனமாய்
நாம் வாடிநின்றோம்...!
காக்கைவீட்டில்
குயில் இருப்பதுண்டு.
கருநாகம் இருக்குமெண்டு
முன்னவர்கள் சொன்னதில்லை...!
உதிர்ந்த பின்னும்
வேணில்காலமே சருகின் வேண்டுதல்.
கனியமுன் கொய்த காயும்
தான் விதையாக
சேயின் வரவிற்காய் காத்திருக்கும்...!
இனியொரு படை செய்தால்
பிளவுக்கு விடை கொடுத்து
புதியதோர் புள்ளி
பூமியில் வைத்திடு தலைவா..!
No comments:
Post a Comment