மரணங்கள் பார்த்து
மனமெல்லாம் மரத்துவிட்ட என்னினத்துக்கு
மானமெனும் மாயை மட்டுமே
மாற்றுடையாய்...!
எம்மவர் ரணங்கள்
விவரண சித்திரங்கள்-ஊடகங்களுக்கு
காயம் கொண்ட விழுப்புண்கள்
காட்சிப்பொருட்கள்
காட்டிக்கொடுப்புகளும்
காந்தியமும்
கருணைக்கொலை புரிந்தன
குற்றுயிராய் இருந்த தமிழை
தன்னுயிர் தந்து மனிதம் காத்த கர்ணர்கள்
தமிழ்க்கொடி படரதம்முடல்
தந்த பாரி வள்ளல்கள்
தந்த பாரி வள்ளல்கள்
தாலாட்டின்றியே தாழுறக்கம் சென்றவர்கள்.
மாற்றான் நெருப்பில்
மறைவாய் கூதல்காய்ந்தவர் நாங்கள்
மறம் என்பதை மறந்து
அறம் இன்றி வாழ்கின்றோம் இன்றும்...!
No comments:
Post a Comment