ஈரைந்து திங்கள்
உன்னுள்ளே எனைக்காத்து
ஈற்றிலே
உயிருடன் மெய் தந்தாய்...!
பசிதீர்க்க
பாலாகும் உன்னுதிரம்
நானாட
உன்சேலை ஊஞ்சலாகும்...!
நான் உண்ணும்வரை
காத்திருந்தாய்
நான் உண்ணும்வேளை
நோன்பிருந்தாய்...!
வெற்றிகளில்
எனையேற்றிக் கொண்டாடினாய்
தோல்விகளில்
எனைத்தேற்றி நீவாடினாய்..!
இறைகொண்ட
நியவடிவம் நீயல்லவா
மறுமுறை நீயெந்தன்
மகவாக வேண்டும்
மகனாக என்வேண்டுகை
இதுவல்லவா...!
No comments:
Post a Comment