Friday, 27 April 2012

உன்னோடு

மகரந்தம் சுரக்கும் தேனா
இதழோடு வடியும் பன்னீரா
மனதோடு மயக்கும் மானே
உன்னோடு வாழ நான்வரவா..

இனியது உந்தன் வதனமா
இளையவள் உந்தன் வனப்பா
நீ பூத்துக்குலுங்கும் மரமா
உன் மடிதூங்க நான் வரவா..

உயிர்வரை நோகும் உணர்வால்
உள்ளம் குதிக்கும் நீவா
உலகின் அழகியநதி நீயா
உன்னில் நீராடநான் வரவா..

பெண்மையென்பது மென்மையா
பெண்மைக்கே உன்னால் மேன்மையா
வெண்மதியால் செய்தவுடலா
நிலாக்காய நான் வரவா நான்வரவா...!

No comments:

Post a Comment