Friday, 17 September 2010

நினைச்சது தப்பு

நீ என்னுடன் பழகிய தருணங்களை விட
"நீ நினைச்சது தப்பு" என்று என்னைப்பார்த்து
நானே சொன்ன அந்த உயிர் வலித்த கணமே
நினைக்க முடியாமல் மறக்க மாட்டேனென்கிறது...

உன் உதடுகள் சொல்வது உண்மைதானா...
உன் மனமென்னை தள்ளுகிறதா-இல்லை
என் நினைவுகளை கொல்வது உன் சுயம்தானா..

நீ என்னை மாற்றானாய் நினைத்தாலும்
உன்னை மாற்றான் துணையாய் பார்க்க வலிக்குதடி
தோற்றது நான் மட்டுமல்ல...
நம்மை சேர்க்க எண்ணிய காதலும்தான்.

No comments:

Post a Comment