Friday, 17 September 2010

மனதோடு......

பார்த்தபோதே பனித்துவிட்ட....
பங்குனி பனித்துளியவள்.
பார்க்காமலே பார்க்கவைத்தாள்.
பார்த்தபோது ரசிக்கவைத்தாள்.

அழுதுகொண்டே சிரிக்கவைத்தாள்.
சிரித்துக்கொண்டும் தூங்கவைத்தாள்.
பகலில் நிழலாகவந்தாள்.
இரவிலும் கனவாகவந்தாள்.

விண்ணோடு முகிலாக ..
முகிலுக்குள் மழையாக..
கண்ணோடு துளியாக...
என்னோடு அவள்......
மனதோடு காதல்..
.என் மனதோடு காதல்...

No comments:

Post a Comment