Friday, 17 September 2010

தமிழன்னை....

உயிர்களின் ஆதாரம் எம் அன்னையே....
அவள் தாய் கூட தரணி போற்றும் தமிழன்னையே........
கல் தோன்றி மண் தோன்ற முன்
அவள் தோன்றினாள் இது பெருமையே....
அவள் வாழ நாம் தருவோம் எம் உயிர் தன்னையே....
அவணியிங்கு அழிந்தாலும் அவள் வாழ்வாள் இது உண்மையே....

மூவேந்தர் அரியணையில் கோலோச்சினாள்..
மூன்றெழுத்தில் பேர் கொண்டு தமிழாகினாள்
முத்தமிழாய் தான்வந்து தேன்பாச்சினாள்....
மூத்த குடியாக வந்தோர்க்கு முன் தோன்றினாள்...

அறமென்றால் தமிழென்று பொருள் கொள்ளுமே... ....
மறமென்றால் எம்மினத்தின் உயிராகுமே....
வரம்பென்று ஒன்றில்லை தமிழன்னைக்கே...
எல்லைகள் எதுவுமில்லை அவள் வாழ்விற்கே...

சுவாசம் பெற்று உயிர் வாழ நாதியில்லை என்று போகினும்....
காற்றிங்கு இல்லாமல் போகக்கூடுமா.....
நாம் போற்றும் தமிழ் கூட அது போலத்தான்...
நாம் இருந்தாலும் இறந்தாலும் தமிழ் வாழணுமே.

No comments:

Post a Comment