Friday, 17 September 2010

வெண்மதியே...

நான் செல்லும் இடமெல்லாம்
என் நிழலாக வரும் வரும் வெண்மதியே
உன்னைத்தானே உவமானமாய்க் கொண்டேன்
என்னவளை உவமேயமாக்கும் போது...

உன்னைப்போல் அவளும்
என்வாழ்க்கையை விட்டு மறைவாளென்று
அப்போது புரியமல்த்தான் உன்னைக்கொண்டு
அவள் அழகைச் சொன்னேன்...

இப்போதெல்லாம் உன்னைக்கொண்டு
அவள் நினைவுகளை மட்டும்தானே
உவமைப்படுத்த முடிகிறது...
அவைகள் மட்டும் பௌர்ணமி நிலவாக
என் வாழ்க்கையில் ஒளிர்கின்றன....

No comments:

Post a Comment