Friday, 17 September 2010

வலி கொல்லுதடி ......

ஒரு பாதி உன் கனவாக என் இரவுகள் விடியுதடி.
மறு பாதி உன் நினைவாக என் நாட்கள் கழியுதடி.
உன்னிடம் தந்தது என்னிதயத்தின் அசலடி..
எனக்குள்ளும் அதன் நிழல் உள்ளதடி.
அதனுள்ளும் உணர்வுகள் உள்ளதடி.

நீ வராதவரை என் பாதை நெடுந்தூர சாலையடி.
என் சாலையோர நிழலாக உன்னைப் பார்த்தேனடி.
நீ என்னில் செல்லும் பேருந்தாய் வந்தாயடி.

உன் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகள்.
என் வாழ்க்கையை உதிர்க்க வைக்குதடி.
உன்னாலே இறக்கும் என் இதயத்தினுள் .
உனக்கான கோயில் உள்ளதடி.

பூவைத்தேடி வண்டு செல்வது வழமையடி.
முட்கள் வண்டை தடுப்பது இயற்கையடி.
மலரே தேனை விசமாய் தருவது கொடுமையடி

இந்த காதலேன்பதே விந்தையடி...
காரணமே இல்லாமல் வந்து கொள்ளுதடி...
தோரணமே இல்லாமல் இதயம் கொல்லுதடி.....

No comments:

Post a Comment