Sunday, 19 August 2012

பேச்சின்றி.

மடிந்திருந்தால் நேற்றோடு
முடிந்திருக்கும்
காற்றோடு கலந்திருந்தால்.

கற்றையோடு
ஒற்றையாக-உன்
நெற்றிப்பரப்பில்-என்
வெற்றுப்பார்வை...!!!

கைப்பிடிக்கும் தூரம்தான்
ஆனால்...
வெற்றுப்பைகள் நெஞ்யையழுத்த
காற்றுப்பைகள் வேகமாய்...

நமதெல்லாம்-இனி
தனித்தனியாக
நான்மட்டும் தன்னந்தனியாக...

தொலைந்துபோகிறேன்
பேச்சின்றி
தொலைபேசியுமின்றி ...

No comments:

Post a Comment