Tuesday, 7 August 2012

மனிதம்.


எட்டணா போதுமென்றால்
ஏடெதுக்கு
எட்டியே போய்விடு
உறவெதுக்கு...?

கணினியுகத்தில்-உன்

கண்ணியம் குறைந்திட்டால்
உணர்வுகள் இறந்திட்டால்
பொறிகள்
உன்னிடம் பெற்றிடாதா?

அசேதனம்

சேதனத்தை நிரவிடும்போது
இயற்கைதன்
சமநிலை இழந்திடாதா?

மரங்கள் அருகிட

உயிர்கள் கருகிடாதா? 
உந்தன் சந்ததி
உன்னோடு சரிந்திடாதா?

பசிகொல்லும் உலகில்

காமம் முறைதாண்டும்போது
நீதிதான் தூங்கிட்டால்
மனிதம் காடேகிடாதா?

இயற்கையின் இளவல் நீதான்

மறந்திடாதே
மனிதம் உன்னியல்பேதான்
தொலைத்திடாதே
உயர்வே உழைப்பிற்தான்
சோர்ந்திடாதே...!!!

No comments:

Post a Comment