Monday, 11 June 2012

உலகத்தரத்தில் ஒரு தமிழ்ப்படைப்பு


தமிழ்த்திரையுலகத்தை பொறுத்தவரை சகலகலாவல்லவனாக மட்டுமல்லாமல் சகலத்தையும் அடுத்தநிலைநோக்கி எடுத்துச்செல்லும் சுமைதாங்கியாகவும் தன்னை வரித்துக்கொண்டவர்(இப்பொழுது பலரைக்குறிப்பிடலாம் என்றாலும் நானறிந்தவரையில் இவரே வாழும் முன்னோடி) உலகநாயகன்.எனினும் அவர் இதற்காக வணிகரீதியாக நல்லபெறுதிகளை பெற்றிருக்கவில்லை அல்லது குறைவாகவே பெற்றிருந்தார்.

அதற்கு உதாரணங்களாக ஹேராம்,ஆளவந்தான்,அன்பேசிவம், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் பலபடங்களை குறிப்பிடமுடியும். தசாவதாரம்,தேவர்மகன் போல வெற்றிக்கனிகள் இருந்தாலும் அவையும் போதுமானவையாக தென்படவில்லை அவரின் உழைப்புக்கு...........ஆனால் இந்தமுறை நல்லதொரு அறுவடை கமலுக்கு கிடைக்குமென நம்பலாம் ஏனெனில்,கடந்த சிலதினங்கள்வரை விரைவில் வரவிருக்கும் படங்களின் வரிசையிலிருந்த விஸ்பரூபம் எனும் திரைப்படம்,இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் தவமிருக்கும் படமாக மாறியிருக்கிறது....

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று வெளியிடப்பட்ட படத்தின் முன்னோட்டக்காட்சி மற்றும் புகைப்படங்கள்,

முன்னோட்டத்தை காண சொடுக்கவும்....


நேர்த்தியான தொழினுட்பங்களோடு செதுக்கப்பட்ட சித்திரமாக மின்னுகிறது முன்னோட்டம்.கமலின் நடிப்பை இன்னொருமுறை சொல்லித்தெரிய வேண்டியதில்லையென்றாலும், படத்தில் உண்மையாகவே கமல் இரட்டை(வேட)விஸ்பரூபம் எடுத்திருக்கிறார்.அதிலும் கிருஷ்ணராக ஆண்ட்ரியாவும் ராதையாக கமலும் அபிநயம் காட்டும் காட்சியில் என்ன ஒரு நளினம் ராதையின் மன்னிக்கவும் கமலின் உடல்முழுதும்.ஆண்ட்ரியா போதுமான கம்பீரம் காட்டியிருக்கின்றார்.

இதுவரையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறது கமல் சொல்லியிருக்கும் கதையுங்கூட....அமெரிக்காவில் தனது உயர்கல்வியைப் பூர்த்திசெய்து,வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒருபெண்(நிருபமா) ,அங்குள்ள நடனப்பள்ளியொன்றை நடத்திவரும் விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்கிறாள்.காதல்,ஊடல்,கூடலின்றி இல்லறம் நடத்தி தனது உயர்கல்வியை முடித்து வேலைக்கு செல்ல தொடங்குகிறாள்.

இதன்பின்தான் கதையின் போக்கில் மாற்றம் வருகிறது, இப்பொழுது திருமணத்தை முறிக்கவிரும்புகிறாள் நிருபாமா.இதற்காக ஒரு தனியார் துப்பறிபவரை வாடகைக்கு அமர்த்தி விஸ்வநாதனிடம் உள்ள பலவீனங்கள்,தீய பழக்கவழக்கங்களை அறியமுற்படுகிறாள்.

இதன்போதுகிடைக்கும் துப்புத்தான் மிகுதிக்கதையை கொண்டுசெல்கிறது......இதுதான் கமல் சொல்லியிருக்கும் கதை,மிகுதியை வெள்ளித்திரையில் பார்க்க காத்திருப்போம்.


இரண்டாவது இந்தபடம் சிங்கப்பூரில் இடம்பெற்ற சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது,படத்தைப்பார்த்த உலகநாயகனின் நண்பரும் பிரபல ஆங்கிலப்படத் தயாரிப்பாளருமான பேரி ஒஸ்போன் அவர்கள் தனது தாயரிப்பில் கமலை படமொன்றை இயக்கி நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.அதற்கு கமலும் ஒத்துக்கொண்டுள்ளாராம்.

கமல் தன் குரலில்....


இந்த இரண்டுமே படத்தின் தரத்தையும் நேர்த்தியையும் அறிய போதுமானவை......விஸ்வரூபத்தை தொடர்ந்தும் நல்ல விருந்துக்காக காத்திருப்போம்.


No comments:

Post a Comment