Thursday, 19 July 2012

என்காதல்...


கண்டவுடன் அல்ல-காதல்
வந்தவுடன்
நான்கொள்ள நீயே இல்லை....

கற்றையாய் எழுதிட
நினைவுகள் பல
இருந்தும்
ஒற்றையாய்
உனைபார்த்த கணங்களும்
ஒய்யாரமாய்
எனைப்பார்த்த கண்களும்
பசுமையாய்-என்மன
பாலைவனத்தில்...

ஏட்டுக்காதலெல்லாம்
தேனாய் இனித்திட 
தேளாய் கொட்டுகிறது
என்காதல்மட்டும்.

No comments:

Post a Comment